சீனாவில் நடந்து வரும் 'பாரா' ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை துவக்கி உள்ளது.
சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய விளையாட்டு போட்டி நேற்று (அக்., 22) கோலாகலமாக துவங்கியது. 4 நாடுகளை சேர்ந்த, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளி, ராம்சிங் வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.