ரோகித் சர்மா உலகக்கோப்பையை ஏந்தும் வரை தோழியுடன் டேட்டிங் இல்லை! அதிரவைக்கும் புனே ரசிகரின் அறிவிப்பு

By காமதேனு

இந்தியா - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.

புனே ரசிகர் வித்தியாச ஸ்டேட்மெண்ட்

இந்த போட்டியை காண புனே நகரம் மட்டுமல்லாது, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். ஆட்டத்திற்கு முன்பாக நீல நிற உடையுடன் மைதானத்திற்கு வெளியே உற்சாகமாக குவிந்திருந்த ரசிகர்களில் ஒருவர், ரோகித் சர்மா உலகக் கோப்பையை கையில் ஏந்தும் வரை தான் டேட்டிங் செய்யப்போவதில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தார்.

பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வெல்லப்போவது உறுதி என்றும் அதுவரை தான் தோழியுடன் டேட்டிங் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், இன்றைய போட்டியில் வங்கதேசத்துடனான போட்டியில் வெல்லப்போவதும் உறுதி என்றும் கூறி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இந்த ரசிகரின் வித்தியாச அறிவிப்பு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE