ஒருநாள் போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்து ரோகித் ஷர்மா புதிய சாதனை!

By காமதேனு

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அவர் சிதறடித்தார். இன்றைய போட்டியில் இதுவரை அவர் 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் 300 சிக்ஸர்களை கடந்து ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்திலும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 331 சிக்ஸர் அடித்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

குரூப் தேர்வு தாமதம்... இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்! குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்! ‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு! இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பிரபல நகைச்சுவை நடிகர் கைது! பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE