பாரிஸ் ஒலிம்பிக்: ஜெஸ்வின் ஆல்டிரின், பாருல் சவுத்ரி தோல்வி

By KU BUREAU

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்டிரின், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வீரர் பாருல் சவுத்ரி ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர். நேற்று நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் மகளிர் ஸ்டீபிள்சேஸ் ஹீட் பிரிவில் பாருல் சவுத்ரி 21-வது இடம் பிடித்தார்.

ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முதல் 2 முயற்சிகளில் ஜெஸ்வின் ஆல்டிரின் ஃபவுல் செய்தார். 3-வது முயற்சியில் அவர் 7.61 மீட்டர் நீளம் தாண்டினார். இதனால் அவர் குரூப் பி தகுதிச் சுற்றில் 13-வது இடத்தை பிடித்தார்.

பாய்மரப் படகுப் போட்டியில் மகளிர் டிங்கி பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் 24-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார். அதேபோல் ஆடவர் பாய்மரப் படகுப் போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் 23-வது இடம்பிடித்து வெளியேறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE