பாரிஸ் ஒலிம்பிக்: லவ்லினா வெளியேற்றம்

By KU BUREAU

மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் லோவ்லினா, சீன வீராங்கனை லீ குயானுடன் மோதினார்.

இதில் சீன வீராங்கனை லீ குயான் 4-1 என்ற கணக்கில் லவ்லினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து குத்துச்சண்டைப் போட்டியின் 75 கிலோ பிரிவிலிருந்து லவ்லினா வெளியேறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE