காஞ்சிபுரம் பிரளயகால அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பிரளயகால அம்மனுக்கு அக்னி நட்சத்திரம் முடிவடைவதையொட்டி 1,008 இளநீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாளில் அங்குள்ள பிரளயகால அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்றது.

இந்த அக்னி வெப்பத்தை தணிப்பதற்கும், அக்னி நட்சதிரம் முடிவடைவதை ஒட்டியும் ஏகாம்பரநாதர் கோயிலில் அமைந்துள்ள பிரளய கால அம்மனுக்கு 1008 இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பிரளயகால அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE