திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம்! எப்போது செல்லலாம்... நேரம் அறிவிப்பு

By காமதேனு

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை மாலையில் இருந்து கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. எனவே நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரிவலம்

பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப எல்லா ஏற்பாடுகளையும் முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் செய்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE