மதுரை காளமேக பெருமாள் கோயிலில் உற்சவ சாந்தி

By KU BUREAU

மதுரை: மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவு பெற்றது.

மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள் 18-ல் முக்கியமானது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியஇருவராலும் பாடல் பெற்றதலமாகும். இங்கு வேண்டுவோர்க்கு, வேண்டியதை வழங்கும் மூர்த்தியாக சக்கரத்தாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கடந்த 15-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் ஸ்ரீதேவிபூதேவி தாயாருடன் வழித்துணை பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10-ம் நாள் திருமஞ்சனம்... ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், ஹனுமன் வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், வைரச் சப்பரம், குதிரை வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள், 9-ம் நாள் சட்டத்தேரில் எழுந்தருளினார். 10-ம்நாள் திருமஞ்சனம் முடிந்து, இரவு தோளுக்கினியானில் எழுந்தருளினார்.

நிறைவு நாளான நேற்று காலையில் உற்சவ சாந்தி, திருமஞ்சனம் முடிந்து, வழித்துணை பெருமாள் இருப்பிடம் சேர்ந்தார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.இளங்கோவன் தலைமையிலான பணியாளர்கள் செய்துஇருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE