தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல்களை வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு, அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், துர்க்கை அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று (செப்டம்பர் 26-ம் தேதி) நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 ரொக்கம், 388 கிராம் தங்கம், ஒரு கிலோ 652 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE