இரண்டு ஆண்டுகளில் 13 கோடி பக்தர்கள்... காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம்!

By காமதேனு

உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 13 கோடி பக்தர்கள் வருகை புரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில்

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். நாடுமுழுவதிலும் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசால் இக்கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டது. அதன்காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இக்கோயிலுக்கு 16,000 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட 13 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர்.

இதுகுறித்து கோயிலின் தலைமைச் செயல் அலுவலர் சுனில் வர்மா புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளார். "புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி திறந்துவைத்தபிறகு இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2021, டிசம்பர் 13-ம்தேதியில் இருந்து 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி வரை 12 கோடியே 92 லட்சத்து 24,000 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும். அது மட்டும் இல்லாமல் 2022-ம் ஆண்டை காட்டிலும் 2023-ம் ஆண்டுக்கான முன்பதிவு கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

பகீர்... காதல் தோல்வியால் தீக்குளித்த கல்லூரி மாணவி!

ஓடும் ரயிலில் இளம்பெண் குத்தாட்டம்... இணையத்தை தெறிக்க விட்ட ’ட்யூப் கேர்ள்’ சப்ரினா!

காதலை பிரேக் அப் செய்த சீரியல் நடிகை!

8வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி!

மெட்ரோ ரயில் தடத்தில் பரபரப்பு... தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE