திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிம் மாநிலத்துக்கு நேற்று வருகை புரிந்தார். மாநில மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்ற நிலையில்,
திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்கு நேற்று காலை வருகை புரிந்தார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார். அதோடு, பல்வேறு புத்த மத துறவிகள், அவருக்குப் புத்த மத வழக்கப்படி ஷெர்பாங் பாடலைப் பாடி, நடனமாடிச் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். தலாய்லாமா இதற்கு முன்பு 2010-ல் சிக்கிம் மாநிலத்துக்கு வந்திருந்தார். அதன்பின் தற்போதுதான் மீண்டும் வந்துள்ளார்.
தலாய் லாமா, தற்போது காங்டாக்கில் உள்ள ஒரு ஹோட்டல் தங்கியுள்ளார். அங்குசென்ற அங்கு அவரைக் காண நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 87 வயதான தலாய் லாமா இந்தியா மற்றும் சீன எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் இன்று போதனை செய்கிறார். இந்நிகழ்ச்சியில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது காங்டாக் மாவட்டத்தில் உள்ள சிம்மிக் காம்டாங் தொகுதியில் கர்மபா பார்க் திட்டத்திற்கு தலாய்லாமா அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், "தலாய் லாமாவுக்கு என்னுடைய அன்பான வரவேற்பு வழங்கி, மரியாதை செலுத்தியதைப் பாக்யமாகக் கருதுகிறேன். அவருடைய ஆழ்ந்த போதனைகள் மற்றும் முன்மாதிரியான வழிகாட்டுதல்கள் நம் இதயத்தையும், மனதையும் வளப்படுத்துகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட சிக்கிம் பூமிக்கு அவரை வரவேற்கிறோம்” என்று நெகிழ்ந்திருக்கிறார்.