தங்கச்சிமடம் குழந்தை தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தங்கச்சிமடத்தில் உள்ள குழந்தை தெரசாள் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள புனித குழந்தை தெரசாள் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மறை மாவட்டம் அதிபர் சிங்கராயர் புனித குழந்தை தெரசாள் உருவம் குறித்த கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6 மணிக்கு சப்பர பவனி நடைபெறுள்ளது. பின்னர் திருச்ஜெபமாலை, திருப்பலி மற்றும் மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான அக்டோபர் 1ம் தேதி அன்று தேர் பவனி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக அக்டோபர் 2ம் தேதி அன்று கொடியிறக்கம் நடைபெறுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE