100வது வயதில் கன்னி சாமி... சபரிமலை ஐயப்பனை தரிசித்து நெகிழ்ந்த மூதாட்டி!

By காமதேனு

கேரளாவை சேர்ந்த, 100 வயதைக் கடந்த மூதாட்டி, கன்னி சாமியாக விரதமிருந்து, மலையேறி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ’’பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தைப் பார்த்தேன். என் பகவானைப் பார்த்தபோது கண்ணும், மனதும் நிறைந்துவிட்டன’’ என அவர் பரவசத்துடன் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை மாதம் துவங்கியது முதலே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலை வருவதுண்டு.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மூந்நானக்குழியை சேர்ந்தவர் பாருக்குட்டி அம்மா. இவர் தனது 100வது வயதில் மாலையிட்டு முதன்முதலில் கன்னிசாமியாக சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துள்ளார். தனது பேரன் கிரீஷ், பேரனின் பிள்ளைகளான அம்ருதேஷ், அன்விதா, அவந்திகா என 14 பேருடன் இருமுடி கட்டி பம்பைக்கு வந்தார். அங்கிருந்து டோலி மூலம் சபரிமலை சன்னிதானம் சென்றார் பாருக்குட்டி அம்மா. மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக ஐயப்ப சுவாமியை தரிசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

100 வயதை கடந்து ஐயப்பனை தரிசித்த அந்த மூதாட்டிக்கு தேவசம்போர்டு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து பாருக்குட்டி அம்மா கூறுகையில், "முன்பே சபரிமலைக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை. நூறு வயதில்தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என அப்போது தீர்மானித்தேன். அந்த முடிவின்படி இப்போது சபரிமலைக்கு வந்துவிட்டேன்.

பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தைப் பார்த்தேன். என் பகவானைப் பார்த்தபோது கண்ணும், மனதும் நிறைந்துவிட்டன. சபரிமலைக்கு வரும் வழியில் எனக்கு நிறையபேர் உதவி செய்தார்கள். அவர்களையும் பகவான் பாதுகாக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தேன். என் பேரன் கிரீஷ்குமாரின் மனைவி ராக்கி இஸ்ரேலில் வேலை செய்கிறார். எனவே பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! டிசம்பர் 20 கடைசி நாள்!

துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!

தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE