வனவிலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள கைத்தடிகள்; திட்டத்தை தொடங்கியது திருப்பதி தேவஸ்தானம்!

By காமதேனு

திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மலைப் பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் இன்று தொடங்கியது.

திருப்பதியில் அலிபிரியில் இருந்து ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் சமீபத்தில் சிறுத்தை தாக்கி ஒரு சிறுமி இறந்தார். பின்னர், அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டது. எனினும், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் மற்றொரு சிறுத்தை காணப்பட்டது.

இதனால், பக்தர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மலைப் பாதையில் செல்லும் பக்தர்கள் தங்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் இன்று தொடங்கியது. அதன்படி, பக்தர்களுக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டன. கோயிலுக்கு அருகே மலையேறி வரும் பக்தர்களிடம் இருந்து கைத்தடிகள் திரும்பப் பெறப்படுகின்றன.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்ததாவது: அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 5 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுவாா்கள். இரவு 10 மணி வரை பெரியவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

திருப்பதி

நடைபாதையில் பக்தா்களுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் கைத்தடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வனவிலங்குகளை விரட்டியடிக்கவும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். பக்தா்களை பாதுகாக்க வனப் பணியாளா்களை பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பக்தா்கள் குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டு அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். விலங்குகளுக்கு உணவு வழங்குவோா் மீதும், உணவு விற்பனை செய்பவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதசாரிகள் செல்லும் மலைப் பாதைகளில் 500 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படும். சாலையின் இருபுறமும் வேலி அமைப்பது குறித்து வனத்துறையின் மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை சமா்ப்பிப்பாா்கள். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE