செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இந்த பொருளால் விநாயகருக்கு அபிஷேகம் பண்ணுங்க | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 

By KU BUREAU

எல்லோருக்கும் பொதுவானவராகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் விநாயகர் உள்ளார். விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் எல்லாம் உகந்தவையாகும். ஆயினும், ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும், குறிப்பாக சிறப்பித்துச் செய்யப்படுகின்றன.

பாலாபிஷேகம்:

வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலாபிஷேகம் செய்தால், புத்திரப் பேறு கிடைக்கும்.

தேனாபிஷேகம்:

திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போவதை காணலாம்.

சந்தன அபிஷேகம்:

செஞ்சேரிமலை எனப்படும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவதும் சிறப்பு தரும்.

திருநீறு அபிஷேகம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர், திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகிறார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி, அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்கு திருநீறு அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மஞ்சள் அபிஷேகம்:

மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்கு கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

அன்ன அபிஷேகம்:

பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.

சொர்ணாபிஷேகம்:

திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE