திண்டுக்கல் தாடிக்கொம்பு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் வழிபாடு

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தர ராஜப்பெருமாள் கோயிலில், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சவுந்தர ராஜப்பெருமாள் கோயிலில் பரிவார மூர்த்தியாக சொர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்புப் பூஜை, பாலபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று நடந்த பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE