சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

By காமதேனு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அர்ச்சகராக பணியாற்ற ஆண்டுதோறும் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, தேவசம் வாரியம் நடத்திய நேர்முகத் தேர்வில் இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோயில் கருவறை முன்பு சீட்டுக் குலுக்கல் மூலம் ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக பரமேக்காவு பகுதியைச் சேர்ந்த பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டதாக தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.

பி.என். மகேஷ் - பி.ஜி.முரளி

இந்த வாய்ப்பிற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பதாக பி.என்.மகேஷ் கூறினார். ஐயப்பன் என்னை அவருக்குச் சேவை செய்ய அழைத்துள்ளதாகவும், அதற்கான வாய்ப்பை எனக்கு அளித்ததாகவும், இது என் முன்னோர்களின் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன் என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!

போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!

கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!

பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!

குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE