கோவிந்தா கோவிந்தா…

By கே.சுந்தரராமன்

ஆச்சார்ய பெருமக்கள் திருவேங்கட யாத்திரை, அக்ரூரர் கோகுலம் செல்லுதல், வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடுவர்.

கோவிந்தா என்ற நாமத்தில் திருப்பதி போகும் அனுபவம் இருக்கிறது. அந்த நாமத்தைச் சொன்னாலே அனைத்தும் கிட்டும்.

கோ என்பது பத்து அவதாரங்களையும் குறிக்கும். வேதம் என்று பொருள் தருவதால் வேதத்தை மீட்ட மத்ஸ்யாவதாரம் நினைவுக்கு வரும்.

பர்வதம் என்று பொருள் தருவதால் அதை தூக்கிய கூர்மாவதாரம் நினைவுக்கு வரும்

பூமி என்று பொருள் தருவதால் பூமியை உத்தாரணம் செய்த வராக அவதாரம் நினைவுக்கு வரும்.

நரசிம்மனை கோவிந்தா என்று வணங்குவது வழக்கம்.

பூமிக்கடியில் மூன்றடி மண் கேட்டதால் வாமன அவதாரம் நினைவுக்கு வரும்.

பூமி முழுதும் சுற்றிய பரசுராமனும் கோவிந்தன் தான்.

ஆயுதம் என்று பொருள் தருவதால், 50 வித அஸ்திர சாஸ்திரங்களை விச்வாமித்திரரிடம் இருந்து பெற்ற ராமாவதாரம் நினைவுக்கு வரும்.

பூமியை கலப்பையால் இழுத்த பலராமனுக்கு கோவிந்தன் என்ற பெயர் உண்டு.

பசு என்று பொருள் தருவதால் பசுக்களைக் காத்த கிருஷ்ணனும் கோவிந்தன் என்றே அழைக்கப்படுகிறான்.

இப்படி அனைத்து அவதாரங்களையும் உள்ளடக்கியவனாக வேங்கடவன் (கோவிந்தன்) இருக்கிறான்.

கோவிந்தா என்று அழைத்தாலே மனதளவில் திருமலைக்கு யாத்திரை செல்லலாம். அக்ரூரர் போல கோகுலம் போகலாம். வைகுண்டம் செல்லும் மார்க்கமும் புலப்படும்…

கோவிந்தா கோவிந்தா…

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE