வைகாசி விசாக திருவிழா: நாதன்கோயில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாதன்கோயில் ஜகன்நாதப்பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது.

நாதன்கோயில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் தாயார் பெருமாள் புறப்பாடு நடைபெற்று வந்தது. 28-ம் தேதி பெருமாள் உள்பிரகாரப் புறப்பாடு, உற்சவர் திருமஞ்சனமும் மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை கட்டுத்தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் ஸ்ரீ தேவி - பூ தேவி உடனாய ஜகந்நாதப்பெருமாள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைகர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE