ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அரிய வகை உயிரினங்கள்: கணக்கெடுப்பில் தகவல்

By எஸ்.கோபு

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில், வால்பாறை சரகத்தில் உள்ள கிராஸ் ஹில் (புல்மலை) தேசிய பூங்கா, உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கரியன்சோலைதேசிய பூங்கா ஆகியவற்றில் முதன்முறையாக நீர், நிலம் வாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வால்பாறையில் உள்ள கிராஸ் ஹில் தேசிய பூங்கா 3,122 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 6,600 அடி உயரம் கொண்ட சிகரங்கள் மற்றும் உயரமான பீடபூமிகளை கொண்டது. அதேபோல் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கரியன் சோலை தேசியப்பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 800 அடிக்கும் மேல் அமைந்துள்ள புல்வெளி மலையாகும். மலைச்சரிவுகளுக்கு கீழே பசுமையான மற்றும்இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது.

  காமதேனு தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE