ஹாட் லீக்ஸ்: ஈவிகேஎஸ்ஸுக்கு பயப்படும் ஓபிஎஸ்

By காமதேனு

ஈவிகேஎஸ்ஸுக்கு பயப்படும் ஓபிஎஸ்

தேனி  தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றால் கட்டாயம் மத்திய அமைச்சர் என்று பிரச்சாரம் செய்கிறது ஓபிஎஸ் கம்பெனி. ஆனால், பிரச்சாரத்தில் இவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ஈவிகேஎஸ், “தேனியின் முக்கியப் பிரச்சினையே, ஓபிஎஸ்ஸும் அவரது மகனும்தான். அகல ரயில் பாதை அமைப்பதற்காகப் பிரித்துப் போடப்பட்ட மதுரை - போடி ரயில்வே பாதை வேலை முடியாமல் இருக்கக் காரணம், ஒப்பந்ததாரரிடம் ஓபிஎஸ் 30 பர்சன்ட் கமிஷன் கேட்பதுதான். நான் ஜெயித்தால் ஆறே மாதத்தில் ரயில் பாதை வரும்” என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். இதைக் கேட்டுவிட்டு, “நம்ம ஐடி விங்க வெச்சு இளங்கோவன தொவைச்சு தொங்கவிடலாமா?” என்று ரவீந்திரநாத் குமார் ஓபிஎஸ்ஸிடம் கேட்டாராம். அதற்கு, “யப்பா... அந்தாள மத்தவங்க மாதிரி நெனச்சுறாத. அப்புறம் ஏடாகூடமா எதையாச்சும் எடுத்துவிட்டு, விழுற ஓட்டையும் நமக்கு விழவிடாம பண்ணிடுவாரு” என்று மகனை வாயடைத்துவிட்டாராம் ஓபிஎஸ்.

நல்லா கேளுங்க... நானே சொல்றேன்..!

சீனியர் பத்திரிகையாளர்கள், சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கேள்விகள்கேட்கவைத்து அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் டிடிவி தினகரன் பதில் சொல்லும்விதமாக ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்திருக்கிறதாம் ஜெயா டிவி. சுமார் நான்குமணி நேர அளவுக்குத் தயாராகி இருக்கும்இந்தத் தொகுப்பு நிகழ்ச்சியில் பலதரப்பட்டவர்களும் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முகம் சுளிக்காமல் பதில் சொல்லி இருக்கிறாராம் தினகரன். விரைவில் தொடர் நிகழ்ச்சியாக இதை ஒளிபரப்ப இருக்கிறது ஜெயா டிவி. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பிரச்சார களத்திலும் இந்த நிகழ்ச்சியை டிஸ்பிளே செய்து ஆதரவு திரட்டப் போகிறார்களாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE