முதல்வராவா உட்கார்ந்தாரு... ஒரு செருப்பு மாதிரி உட்கார்ந்திருந்தாரு- ஓபிஎஸ்ஸுக்கு செல்லூரார் சூட்டிய புகழ்மாலை(!?)

By காமதேனு

கே.கே.மகேஷ்

தேர்தல் சமயம் என்பதால் அம்மா பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். தண்ணியிலேயே தயிர் கடைபவர் என்று பெயரெடுத்த ஓ.பன்னீர்செல்வமே மதுரையிலும் தேனியிலும் நடந்த விழாக்களில் எட்டாம் வள்ளலாக அவதாரம் எடுத்தார்!

பெரியகுளத்தில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நல உதவிகள் வழங்கி, 71 ஜோடிகளுக்கு இலவசத் திருமணமும் செய்துவைத்த ஓபிஎஸ், 25 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்கினார்.

“பொங்கலோ பொங்கல்... எடப்பாடி பொங்கல்... ஓபிஎஸ் பொங்கல்... என்று வீடுதோறும் முழக்கம் கேட்டது என்றால் என்ன காரணம், நமது அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுதானே?” என்று மதுரை விழாவை ஆரம்பித்து வைத்தார் தலைமைக்கழக பேச்சாளர் ஏங்கல்ஸ். விழாவுக்கு வரும் வழியில்... இரட்டை இலை, தாமரை, மாம்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையை ஓபிஎஸ்ஸுக்கு அணிவித்தார் விளம்பரப் பிரியர் கிரம்மர் சுரேஷ். அதையே தாம்பூலத்தில் வைத்தும் கொடுத்தார். அதிமுக, பாமக, பாஜக கூட்டணியை ‘இலை பிளஸ் பூ பிளஸ் கனி ஈக்குவல் டு கொட்டை’ என்று சமூக வலைதளங்களில் வறுத்துக்கொண்டிருக்கிற நேரத்தில் இது வேறயா என்று சிரித்தார்கள் அதிமுக நிர்வாகிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE