நிர்வாணம்தான் சார் கடவுள்..!- - ப்ளேபாய் புகைப்படக்காரர் ராமச்சந்திரன்

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

“நிர்வாணம்தான் சார் கடவுள்... ஓவியம் வரையுற மாதிரி, கவிதை எழுதுகிற மாதிரி, மழையைப் பார்க்கிற மாதிரி, காடுகளையும், அருவிகளையும் ரசிக்கிற மாதிரி நிர்வாணமும் இயற்கை தான். அதையும் இயல்பா ரசிக்கிற மனசு மட்டும் வாய்ச்சா போதும்... மனசுக்குள்ள தவம் போல வாய்க்கிற நிர்வாணமும் ஒரு கலைதான். ‘காமசூத்ரா’ கொடுத்த நாடுன்னு கொண்டாடுறோம்… ஆனா, நிர்வாணத்தை விலக்கி வைக்கிறோம்” என்று அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியங்களுடன் பேசும் ராமச்சந்திரன் இந்தியாவில், ‘ப்ளேபாய்’ பத்திரிகையில் புகைப்படக்காரராகப் பணிபுரியும் முதல் மற்றும் ஒரே இந்தியர்.

அரும்பாக்கத்தில் வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலைகளைக் கடந்து சென்றால் விஸ்தாரமாக விரிகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளி. அங்கிருந்து நான்கு கட்டிடங்கள் தள்ளி நிற்கிறது ராமச்சந்திரனின் விளம்பர நிறுவன அலுவலகம்.

திரும்பிய பக்கமெல்லாம் சுவற்றில் விதவிதமாய் உலகின் டாப் மாடல்களின் நிர்வாணப் புகைப்படங்கள் அலங்கரிக்க, குறுந்தாடியில் சிரித்தபடியே தொடர்கிறார் ராமச்சந்திரன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE