சீக்கிரம் எழுந்து வாங்க கேப்டன்!

By காமதேனு

இர.அகிலன்

ஜெயலலிதாவும் கருணாநிதியும் மருத்துவ சிகிச்சையில் இருந்த அதே காலகட்டத்தில் விஜயகாந்த் உடல்நிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

இதற்காக அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். கருணாநிதி இறந்த நேரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்ததால் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் விஜயகாந்தால் கலந்துகொள்ளமுடியவில்லை. அங்கிருந்தபடியே கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர், சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில், கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அப்போது, கம்பீரமாகப் பார்த்தே பழகிப்போன விஜயகாந்த், நடக்கவே சிரமப்பட்டு, பிரேமலதாவின் துணையோடு மெதுவாக நடந்துவந்த காட்சியைக் கண்ட அவரது அபிமானிகள் சோகத்தில் துவண்டார்கள். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE