இவர்கள் இனியாவது சிந்திக்கட்டும்!

By காமதேனு

விஸ்வாசமும் பேட்ட’யும் திரைக்கு வந்து சினிமா ரசிகர்களைத் திளைக்க வைத்திருக்கிறது. அதேசமயம், இந்தப் படங்களின் திரையிடலை ஒட்டி சில விரும்பத் தகாத சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

காட்பாடி அருகே, விஸ்வாசம் படத்துக்குச் செல்ல பணம் கொடுக்கவில்லை என்பதற்காக தந்தையையே தீயிட்டுக் கொளுத்த துணிந்திருக்கிறான் ஒரு மகன். திருக்கோவிலூரில் அஜித்தின் கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்போய் அது சரிந்து விழுந்து ஆறு பேர் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்கள்.

வேலூரில் ஒரு திரையரங்கில் ரசிகர்கள் அதிகாலை 2.30 மணிக்கே கண்விழித்துக் காத்திருந்திருக்கிறார்கள். காட்சி தொடங்கியதும் தியேட்டருக்குள் முண்டியடித்த அவர்கள், இடம் பிடிக்கும் போட்டியில் கத்திக் குத்துக் காட்சிகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். 

இந்தச் செய்திகளை எல்லாம் படிக்கும்போது, நிஜத்தை மறந்து நிழலைக் கொண்டாடும் நம்முடைய இளைய சமுதாயத்தை நினைத்து நெஞ்சம் பதறுகிறது. அதேசமயம், இதையெல்லாம் வெறும் செய்திகளாக மட்டும் படித்துவிட்டு கடந்துவிடவும் முடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE