ஹாட் லீக்ஸ்: சரிதா காட்டில் சரி மழை

By காமதேனு

சரிதா காட்டில் சரி மழை

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் அரசியல் வாழ்க்கைக்கு அணுகுண்டு வைத்தவர் சரிதா நாயர். சோலார் பேனல் மோசடி வழக்கின் மூலம் பிரபலமான இவர் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே தமிழகத்திலும் தன் தொழில்கூடத்தைத் தொடங்கினார். பேப்பர் கப், பேப்பர் பிளேட் தயாரிப்பில் குமரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இவரது நிறுவனம் செயல்படுகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து, பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட பொருட்களைத் தமிழகம் முழுவதும் சப்ளை செய்து செமத்தியாக கல்லாகட்டுகிறார் சரிதா நாயர்.

என்னைய எங்காச்சும் மாத்திவிட்ருங்கோ!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம் வீண்பழி, ‘வெட்னரி டாக்டர்’ என்ற கேலி பேச்சு இவற்றால் அவர் பெருத்த மன உளைச்சலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அமைச்சர் சி.வி.சண்முகம் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இருந்தாலும், “இனிமேல் நான் இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. தயவுசெய்து ஏதாவதொரு முக்கியத்துவமில்லாத துறைக்காவது என்னை மாற்றிவிடுங்கள்” என்று தலைமைச் செயலாளரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம் ராதாகிருஷ்ணன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE