தமிழகத்தை ஆளத் தகுதியில்லாதவர் ரஜினி !- கனல் தெறிக்கும் கவுதமன் பேட்டி

By காமதேனு

நா.இரமேஷ்குமார்

“சக திரைக்கலைஞர்கள் என்ற முறையில் கமல் ரஜினியை மதிக்கிறோம். ஆனால், அவர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறோம். தழிழ் மொழி, பண்பாட்டை அழிக்க யார் வந்தாலும் அவர்களை எதிர்ப்போம். வரும் தேர்தலில் ரஜினிகாந்த் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” என்ற அறிவிப்புடன் தனது புதுக் கட்சி தொடக்கத்துக்கு அச்சாரம் போட்டிருக் கிறார் இயக்குநர் வ.கவுதமன்.

காமதேனு பேட்டிக்காக அவரைத் தேடியபோது, “நாளை காலையில் அல்லிக்குளம் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு... முடிச்சிட்டு வந்துடறேன். பதினோரு மணிக்கு மெரினா கடற்கரைக்கு வந்திருங்க’’ என்று சொன்னார்.

சொன்ன நேரத்தில் வெள்ளைச் சட்டை, ஜீன்ஸ் சகிதம் மெரினாவில் காந்தி சிலையருகே ஆஜரானார் கவுதமன். அந்தச் சமயம் பார்த்து ‘எந்த ஏழு பேர்’ என்று ரஜினியும் வான்ட்டடாய் வந்து வண்டியில் ஏறிக்கொள்ள, நியூஸ் சேனல்களில் இருந்து தொடர்ச்சியாய் சிணுங்கிய செல்போனை சைலன்ட் மோடிற்கு மாற்றிவிட்டு சூடுபிடிக்கிறது பேட்டி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE