பிடித்தவை 10 - ச.மல்லிகா

By காமதேனு

கா.சு.வேலாயுதன்

மதுரை பைக்காராவில் பிறந்து கோவை காளப்பட்டியில் வசிப்பவர் எழுத்தாளர் ச.மல்லிகா. நாட்டுப்புற அறிவுக் கதைகள், 'அதிர்ஷ்டம் தந்த அற்புதம்' உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளுக்கும், 'கடல் ஓசை', 'தேன்சிட்டு' கவிதைத் தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர். புனைவுலகம் மட்டுமன்றி ஆன்மிகம், சித்த மருத்துவ நூல்களும் எழுதியுள்ளார். பத்திரிகைகளுக்கு எழுதுவதோடு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கவிக்குயில் சரோஜினி விருது, கண்ணியச் செம்மல் விருது உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ள ச.மல்லிகாவுக்குப் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: அன்பு, அகிம்சை வழியில் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி. பகைவனுக்கும் அருளும் நெஞ்சமே வீரர் நெஞ்சம் என வீரத்துக்கே புது இலக்கணம் வகுத்தவர் அவர்.

ஊர்: முக்தி தலம் என்பதால் கோயம்புத்தூர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE