சினம் கொண்ட `செல்ஃபி' குமார்!

By காமதேனு

செல்ஃபி  எடுக்க வந்த இளைஞரின்  செல்போனைத் தட்டிவிட்டதால் கடந்த வாரத்தில் வலைதள நாயகனானார் நடிகர் சிவக்குமார். ‘ரசிகர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், பழம்பெரும் நடிகருக்கு இதுகூடவா தெரியாது’ என்று நெட்டிசன்கள் சிவக்குமாரை வறுத்தெடுத்தனர். விஜய் சேதுபதி, அஜித், விஜய் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவர்களது ரசிகர்கள் பகிர்ந்து, ‘இவர்களுக்கு இருக்கும் முதிர்ச்சி சிவக்குமாருக்கு இல்லையே’ என்று விவாதித்தனர். இன்னொரு பக்கம்,  ‘நடிகர் என்றால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா... அவர்களுக்கென தனிப்பட்ட வாழ்க்கை இல்லையா?’ என்று சிவக்குமாருக்கு ஆதரவுக் குரல்களும் பறந்தன.  இத்தனையும் பார்த்துவிட்டு, சிவக்குமாரே வலியவந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அப்படியும் விடாமல்,  ‘மன்னிப்பு கேட்டா போதுமா... உடைந்த செல்போனை யார் வாங்கிக் கொடுப்பா?’ என்று ஒரு கூட்டம் கிளம்ப, அந்த இளைஞருக்குப் புது போனையும் வாங்கிக் கொடுத்துத் தப்பித்தார் சிவக்குமார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE