தாயம்மா முறுக்கு! - களைகட்டும் பலகார ஃபேக்டரிகள்

By காமதேனு

பாரதி.என்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதித்த நீதிமன்றம், நல்லவேளையாக பலகாரம் சாப்பிட நேரம் நிர்ணயிக்கவில்லை. புத்தாடை, பட்டாசு வாங்குதல் எனத் தீபாவளி பர்சேஸ் முழுவீச்சில் சூடு பிடித்துள்ளது. பெரிய பெரிய ஸ்வீட் கடைகளிலும் தீபாவளி பலகாரங்கள் வாங்க கூட்டம் குவிந்து கொண்டிருக்க, தீபாவளி விற்பனைக்காக பலகாரம் போடும் குடும்பங்களும் பயங்கர பிஸி!

பேக்கரிகளில் புதிது புதிதாக கேக் வகைகளும், இனிப்பு, காரங்களும் அறிமுகமாகிவிட்டாலும் பாரம்பரியமான கைச்சுற்று முறுக்குக்கு அவைகள் ஈடாகுமா? இப்போதும் தீபாவளி நேரங்களில் தாயம்மா ஆச்சியின் தரிசனம் கிடைக்க காத்திருக்கத்தான் வேண்டும். நாகர்கோவில் கோட்டாறு குறுந்தெருவில் குட்டிச்சந்தில் இருக்கிறது தாயம்மாவின் வீடு. அந்த வீட்டுக்குள் மூன்று பெண்கள் கைச்சுற்று முறுக்குக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பெண் அதை அடுப்பில் போட்டு எடுக்கிறார். தீபாவளி ஆர்டர்களுக்காக இடைவேளையே இல்லாமல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. வெளியூரில் வசிக்கும் இப்பகுதி இளசுகள், “தாயம்மாச்சி முறுக்கு வாங்கி அனுப்பும்மா” என வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு இந்த 67 வயது ஆச்சியின் கைமுறுக்கு ஃபேமஸ்!

 “எங்கம்மை பகவதியம்மை காலத்துலயே முறுக்கு போடதுதான் தொழிலு. இது அரிசி மாவுல போடுக கை சுத்து முறுக்கு. நான் இந்தத் தொழிலுக்கு வந்து முழுசா அம்பது வருசம் ஆச்சு. முறுக்கு மட்டும் இல்லை, இதே மாதிரி அதிரசம், தட்டுவடை, முந்திரி கொத்து, சீடை எல்லாம் போடுவோம். இதையெல்லாம் சீமந்த (வளைகாப்பு) பலகாரம்ன்னு சொல்லுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE