ரோகிணி
“உம் பேரென்ன?''
``சதீஸ்குமார்''
``உம்பேரு?''
``கலாவதி''
``சரி, தீபாவளிக்கு நீங்க என்ன செய்வீங்க?”
“எண்ணெய் தேய்ச்சுக் குளிப்போம்... புதுச்சட்டை போட்டுக்குவோம்... அப்புறம் பலகாரம் சாப்பிடுவோம்...”
“அப்புறம்?”
“ஆங்... வெடி வெடிப்போம்...”
“அச்சச்சோ அது தப்பாச்சே... காட்டுக்குள்ள யானை, புலி, கரடி எல்லாம் இருக்கு இல்லியா..?”
“ஆமா...”
“வெடிப்போட்டா அதெல்லாம் என்ன பண்ணும்?”
“பயந்து ஓட்டமா ஓடும்...”
“அப்படி அதை ஓட வைக்கிறது பாவம் இல்லியா..?”
”... ...”
“அப்படி பயந்து ஓடற யானை, கரடி எல்லாம் அப்புறமா வந்து பட்டாசு வச்ச நம்மளை தேடித் தேடி மிதிக்கும் இல்லையா... நம்ம ஊட்டையெல்லாம் நொறுக்கும் இல்லியா..?”