கிண்டலுக்குள்ளான சிம்டாங்காரன் 

By காமதேனு

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையில் மெர்சல் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று இணையத்தில் புதிய சாதனைகளைப் படைத்தது. இதனால் சர்கார் படத்தின் பாடல் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், பாடலைக் கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒன்றுமே புரியாத மொழியில் பாடலாசிரியர் விவேக் எழுதிய சிம்டாங்காரான் பாடல் இணையத்தில் பரவலாகக் கிண்டலுக்குள்ளானது. பாபகுபலியில் வரும் காளகேய மன்னன் எழுதிய பாட்டாக இருக்குமோ என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இதில், வடிவேலுவை வைத்து கலாய்த்த மீம்களெல்லாம் அல்டிமேட் ரகங்கள்.

தேர்தல் களத்தில் ரஜினி விஸ்வரூபம் எடுப்பார் - ஏ.சி.சண்முகம்

அப்ப கமல்ஹாசன் என்ன கபாலி எடுப்பாரா..! - பால சுப்ரமணி

நானும் அதிமுக அரசை விமர்சித்துள்ளேன்... என் நாக்கை அறுப்பாங்களா? - மத்திய அமைச்சர் பொன்னார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE