பிடித்தவை 10- கவிஞர் ச.பிரியா

By காமதேனு

பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்தவர் கவிஞர் ச.பிரியா. ‘ஓவியங்கள் வழியும் தூரிகை’ என்ற தலைப்பிலான கவிதை நூலுக்கும் சொந்தக்காரர். கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி உள்ளிட்ட இதழ்களிலும், புன்னகை, கருந்துளை உள்ளிட்ட சிற்றிதழ்களிலும் ஏராளமான கவிதைளை எழுதிக் குவித்துள்ளார். த.மு.எ.க.ச-தின் வளரும் படைப்பாளர் விருது, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நமது கவிஞர் விருது, மீரா விருது என விருதுகளையும் குவித்துள்ள பிரியாவுக்கு பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: கர்மவீரர் காமராசர். தன்னலம் கருதாமல் நேர்மை, உழைப்பு, எளிமை இந்த மூன்றையும் உயிர் மூச்சாய்க் கொண்டு செயலாற்றிய பெருந்தலைவர் அவர். அதனால்தான் ஏராளமான அணைக்கட்டுகளையும், பள்ளிக் கூடங்களையும் உருவாக்கிய அவரது ஆளுமைத்திறனைத் தலைமுறைகள் கடந்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கதை: எர்னஸ்டோ ஹெமிங்வேயின் ‘தி ஓல்டு மேன் அண்ட் தி ஸீ’, ஜெயகாந்தனின் ‘பொம்மைகள்’, சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’.
ஊர்: எப்போதுமே வற்றாத ஆறு, பசுமை போர்த்திய மரங்கள், வயல்வெளிகள் என மொத்த இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்ட ஆனைமலை. நான் வசிக்கும் இடமும் அதுதான் என்பதும் கூடுதல் காரணம்.

தலம்: மனித வாழ்வே மரணத்தை நோக்கிய பயணம்தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் கங்கை நதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE