ஆயிரம் ரூபாயும் அந்த ‘டூர் கிட்’டும்

By காமதேனு

மாநாடு கூட்டும் மன்னார்குடி மைந்தர்!

தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தத் திட்டமிடும் திவாகரன், அடுத்தடுத்து திருச்சியிலும் மன்னார்குடியிலும் மாநாடு கூட்டி பலம் காட்டப்  போகிறாராம். தனியாகக் கட்சி நடத்தினாலும் தனது மகன் ஜெயானந்துக்கு அதிமுக-வில் முக்கியப் பதவி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாராம் திவாகரன். அதற்காகவே ஈபிஎஸ் வகையறாக்களை ஆதரிக்கும் அறிக்கைகளையும் அள்ளிவிட்டாராம். ஆனாலும் ஆளும் தரப்பிலிருந்து இதற்கு பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் போனதாலேயே இப்போது மாநாடு கூட்டி கூட்டம் காட்டப் புறப்பட்டிருக்கிறாராம் இந்த மன்னார்குடி மைந்தர்!

அம்மா வழியில் எடப்பாடியார்!

“எனது அரசாங்கம்... நான் செய்தேன்... நான் உத்தரவிட்டேன்...” இப்படியெல்லாம் தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக் கொள்வது ஜெயலலிதாவின் பாணி. அதே 
ஸ்டைலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், “நான் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி விட்டேன்... நான் ஆணையிட்டுள்ளேன்... நான் போட்ட திட்டம்...” என்றெல்லாம் முழங்க ஆரம்பித்திருக்கிறார். இதைத்தான் ‘அம்மா வழியில் நடக்கும் ஆட்சி’ என்கிறார்களோ..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE