ப(ரி)சு வழங்கிய மோடி! பார்த்து சிரித்த நெட்டிசன்ஸ்!

By காமதேனு

சமீபத்தில் ருவாண்டா நாட்டுக்குச் சென்றிருந்த மோடி, அங்கு செயல்பட்டுவரும் ‘கிரிங்கா’ திட்டத்தின்கீழ் அங்குள்ள மக்களுக்கு 200 பசுக்களைப் பரிசாக வழங்கினார். பசுக்களைப் பரிசாக வழங்குவது அந்நாட்டில் மரியாதைக்குரிய விஷயம். அதேசமயம் ருவாண்டா மக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். ஆனால், இந்தியாவில் பாஜக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில், பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்பாவி மக்கள் பலரை கும்பலாகத்  தாக்கிக் கொன்றிருக்கிறார்கள். இச்செயலை ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மாட்டிறைச்சி உண்ணும் ருவாண்டா நாட்டுக்கு மோடி பசுக்களைப் பரிசாக வழங்கியதை சமூக ஊடகங்களில் நெட்டிசன்ஸ் நையாண்டியுடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

-தொகுப்பு: கனி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE