கனவுடன் வந்தார்... காலத்தை வென்றார்..!

By காமதேனு

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர், உத்தரபிரதேசத்தில் உள்ள படோஹி என்ற சிறுநகரத்துப் பெட்டிக்கடைக்காரரின் மகன்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் கனவுடன் மும்பை வந்தார். ஆஸாத் கிரிக்கெட் மைதானத்தில் பணியாளர்கள் தங்கும் கூடாரத்தில் தங்கிக்கொண்டு மூன்றாண்டுகள் கிரிக்கெட் பயிற்சி செய்தார். பானிபூரி விற்று வாழ்க்கையை ஓட்டிய இவரின் பல இரவுகள் பட்டினியுடன் கழிந்தன. ஆனாலும், தனது பேட்டிங் திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி நகர்ந்தார்.

மும்பையின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கு விளையாடி சதங்களைக் குவித்தவர், இதோ... ஆகஸ்டில் இலங்கையில் நடக்கும் தொடரில் இந்தியாவுக்காக விளையாடி தனது கனவை ஜெயிக்கவிருக்கிறார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE