பேயோட்டிய எம்எல்ஏ!

By காமதேனு

ஆந்திரா மாநிலத்தின் பாலகொல்லு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராமநாயுடு. இவர், இடுகாட்டைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களின் பயத்தைப் போக்குவதற்காக மூன்று நாட்கள் இடுகாட்டிலேயே உண்டு, உறங்கித் தங்கியிருந்தார். மாநில அரசு இந்த இடுகாட்டைச் சீரமைக்கச் சென்ற ஆண்டே 3 கோடி ரூபாய் ஒதுக்கியது. இருப்பினும் பேய் பயம் காரணமாக இடுகாட்டைச் சீரமைக்கும் பணியைத் தொடராத பணியாளர்கள், எம்எல்ஏ-வின் இந்தச் செயலால் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்தச் செய்தியை எம்எல்ஏ நிம்மல ராமநாயுடு தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற பிரபலங்கள் உட்பட நெட்டிசன்ஸும் ராமநாயுடுவின் இந்த முயற்சியைப் பாராட்டினர்.

தண்ணீரை சர்பத்தாக மாற்றும் காதல்!

பாலிவுட்டில் தற்போது அதிகமாகச் செய்தியில் அடிபடும் காதல் ஜோடியாக இருக்கிறது ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி. சமீபத்தில், ‘ஃபிலிம் கம்பானியன்’ என்ற இணையதளம் ரன்பீரிடம் பேட்டி எடுத்தது. அப்போது, ஆலியா வுடனான காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘காதல் வசப்படும்போது தண்ணீர்கூட சர்பத்தாக மாறிவிடும்’ என்று பதிலளித்திருந்தார் ரன்பீர். இதை நெட்டிசன்ஸ் ட்விட்டரில் கடுமையாக ட்ரோல் செய்திருந்தனர்

சாமானியரிடம் தோற்ற சாம்பியன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE