பிடித்தவை 10

By காமதேனு

மண்ணில் இப்படி மனிதரும் உண்டோ!

- மானா பாஸ்கரன்
baskaran.m@thehindutamil.co.in

பெண்ணின் ஒடுக்கப்பட்ட வெளியினையும், பெண் கடவுள்களின் போலியான இருண்மை கொண்ட திரையினையும் கவிதைகள் வழியே முன்வைக்கும் அ.ரோஸ்லின் மதுரை மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர். தமிழ், வரலாறு, இஸ்லாம் உட்பட நான்கு இளநிலை பட்டங்களும், எம்ஃபில் பட்டமும் பெற்றவர். "மனதின் மெல்லிய அடுக்குகளுக்குள் தோன்றி மறையும் எண்ணங்களின் பிரதிகளால் வாழ்வும் எழுத்தும் கட்டமைவதாகக் கருதுகிறேன்" என்று சொல்லும் இவர் ‘அழுகிய முதல் துளி’, ‘மழை எனும் பெண்’, ‘மஞ்சள் முத்தம்’, ‘காடறியாது பூக்கும் மலர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பெண் சுதந்திரம், சுற்றுச்சூழலில் ஆர்வம் அதிகம். அவருக்குப் பிடித்தவை 10 இங்கே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE