வேலைவாய்ப்பின்மை எனும் கூட்டுத் துயரம்!

By காமதேனு

உலகிலேயே வேலை கிடைக்காதவர்கள் அதிகம் வாழும் நாடாகிவருகிறது இந்தியா. மத்திய தொழிலாளர் துறை வெளியிட்டிருக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், பெரியதொரு சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அட்டவணையில் 60-வது இடத்தில் இருக்கிறது இந்தியா.  உலக நாடுகளின் பசி அட்டவணையில் இந்தியா 100-வது இடத்துக்கு இறங்கிவிட்டது.

உலகில் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னணியில் இருக்கும் காலகட்டத்திலேயே இதுவும் சேர்ந்து நடந்துகொண்டிருப்பதுதான் விசித்திரமான கொடுமை!

இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது சமத்துவம் அற்றதாக ஊதிப் பெருகுவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தியாவில் 1% பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த

செல்வத்தில் 58%-ஐ தங்கள் வசம் வைத்துள்ளனர். ‘முதல் 57 பெரும் பணக்காரர்கள் வைத்துள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு, இங்குள்ள 70% மக்களுடைய சொத்துகளுக்குச் சமமானது’ என்று ‘ஆக்ஸ்ஃபாம்’ அமைப்பு தெரிவிக்கிறது. மறுபுறம் சுயவேலைகள் அருகி, ஏற்கெனவே உள்ள பணியிடங்களும் ஆவியாகின்றன. நாட்டு மக்களில் 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்கிற சூழலில், அதிகரிக்கும் இந்த ஏற்றத்தாழ்வும் வேலைவாய்ப்பின்மையும் பெரிய ஆபத்துகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE