எடப்பாடி பழனிசாமி ஆகிய நான்…

By காமதேனு

எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. “ஆண்டுதான் நிறைவு! ஆட்சி நிறைவா” என்ற நம் ‘மைண்ட் வாய்ஸ்’தான் எல்லாருடைய ‘வாய்ஸாக’வும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவரது ஆட்சியின் ‘ஆண்டு விழா’வை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியை, மன்னிக்கவும், எடப்பாடி பழனிசாமிகளைப் பேட்டியெடுக்க எடப்பாடிக்கே புறப்பட்டோம்!

கொங்கு மண்டல கிராமங்களில் பழனிசாமிகளுக்கு பஞ்சமே கிடையாது. அவங்க எல்லாம் என்ன செய்றாங்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு கேட்டுத்தான் பார்ப்போமே.

“அவரோட ஊரு இதுல்லங்கண்ணா. நெடுங்குளம் பக்கத்துல இருக்கிற சிலுவம்பாளையம். இங்கிருந்து எட்டு மைல் தூரம். எடப்பாடி தொகுதியிலயே அடுத்தடுத்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏவானதால அவர் பேரு எடப்பாடி பழனிசாமி ஆகிப்போச்சு!” என்றார்கள். “இல்லிங்க, நான் அவரைப் பார்க்க வர்லிங்க” என்று விஷயத்தைச் சொன்னதும், “எடப்பாடியில பழனிசாமிகளுக்கா பஞ்சம்? வாங்க!” என கூட்டிப்போனார் ஓர் இளைஞர்.

நாம் சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பேருந்து நிலையத்தை ஒட்டித் தெருவோர உணவகம் நடத்துபவர். கும்மென புகை கிளம்ப, தோசை சுட்டுக்கொண்டிருந்தவரை கேமராவும் கையுமாக நெருங்கி, “எடப்பாடி பழனிசாமி நீங்கதானுங்க?!” என்றதும், “ஐயோ, அது நானில்லைங்க. நான் வெறும் சப்ளையர் பழனிசாமிங்க!” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE