மருதநாயகத்தின் நவீன திருக்குறள்

By காமதேனு

மருதநாயகம் - அதிகாரத்துக்கு ஒன்று வீதம் 133 நவீன குறட்பாக்களை எழுதியிருக்கும் பொறியியல் பட்டதாரி இளைஞர்.

சிவகாசியைச் சேர்ந்த மருதநாயகம் கல்லூரி நாட்களிலேயே இலக்கிய மேடைகளின் கதாநாயகன். பொதுவாக, நிகழ்ச்சிகளின் நிறைவில் குறள் ஒன்றைச் சொல்லி முடிப்பது மருதநாயகத்தின் தனித்துவம். அப்படியொரு மேடையில் இவர் குறள் படித்தபோது, ‘எப்பயோ படிச்ச திருக்குறளை நாங்களெல்லாம் மறந்து கொள்ள நாளாச்சு.. நீங்க மட்டும் எப்டி இன்னமும் மறக்காம இருக்கீங்க?’ என்று கேட்டுவிட்டார் ஒரு மாணவர். அந்தக் கேள்விதான் மருதநாயகத்தை பதினோராவது திருக்குறள் எனும் நவீன திருக்குறளைப் படைக்க வைத்தது. யாரும் எளிதில் படித்து ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எளிமையாக நவீன திருக்குறளை படைத்திருக்கிறார் மருதநாயகம்.

‘நற்கதி விரும்பி தூய துதிபாடின்

தீயகதி மாறப் பெறும்.’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE