புரதச்சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்... இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை!

By காமதேனு

உடல் எடையைக் கூட்டுவதற்காக புரதச் சத்து பவுடர்களை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதிக உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், உணவு லேபிள்களில் உள்ள தகவல்களைப் படிக்கவேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை இயங்கிவரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) புதன்கிழமையன்று, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தொற்றாத நோய்களை தடுப்பதற்குமான திருத்தப்பட்ட 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை' (DGIs) வெளியிட்டது.

ஐசிஎம்ஆர்-என்ஐஎன் இயக்குனர் டாக்டர் ஹேமலதா தலைமையிலான பல துறை நிபுணர்கள் குழுவால் இந்த உணவு வழிகாட்டுதல்கள் வரைவு செய்யப்பட்டு பல அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ளன. இதன்படி பதினேழு வழிகாட்டுதல்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த உணவு வழிகாட்டுதல்களின்படி, அதிக அளவு புரதச்சத்து பொடிகளை நீண்ட நாட்கள் உட்கொள்வது அல்லது அதிக புரதச் செறிவை உட்கொள்வது எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற சாத்தியமான ஆபத்துகளை உருவாக்கும்.

சர்க்கரையானது மொத்த உணவு உட்கொள்ளலில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும், சீரான உணவு தானியங்கள் மற்றும் தினைகளிலிருந்து 45 சதவீதத்திற்கு மிகாமல் கலோரிகளையும், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சியிலிருந்து 15 சதவீதம் வரை கலோரிகளையும் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள கலோரிகள் கொட்டைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து வர வேண்டும். மொத்த கொழுப்பு உட்கொள்ளல் 30 சதவீத ஆற்றலை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

துரித உணவுகள்

பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியின் குறைந்த விலை மற்றும் அதிக விலை காரணமாக, இந்திய மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் தானியங்களை பெரிதும் நம்பியுள்ளனர். இதன் விளைவாக அத்தியாவசிய மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் (அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாகவே உட்கொள்ளப்படுகின்றன.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை குறைவாக உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும் மற்றும் இளம் வயதிலிருந்தே இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல்நல கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கும். இந்தியாவில் மொத்த நோய் சுமைகளில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுவதாக இந்த மதிப்பீடுகள் காட்டுகின்றன. ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடல் செயல்பாடு கரோனரி இதய நோய் (CHD) மற்றும் உயர் இரத்த அழுத்தம் (HTN) ஆகியவற்றின் விகிதத்தை கணிசமாக குறைக்கிறது. மேலும், இது டைப் 2 வகை நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுக்கும் என இந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் அகால மரணங்களின் கணிசமான விகிதத்தைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு

சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகரிப்பு, குறைவான உடல் உழைப்பு மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உடல்நிலை மிகவும் மோசமடைகின்றன. இது நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் மற்றும் உடல் பருமனுக்கு காரணமாகிறது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE