’செந்தமிழ் மாமணி’ எழுத்தாளர் பீர் முகம்மது காலமானார்

By காமதேனு

எழுத்தாளர் சை.பீர் முகம்மது உடல் நலம் குறைவு காரணமாக மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

தமிழகத்தின் தேவக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட மலேசியா எழுத்தாளர் சை.பீர் முகம்மது. தமிழக இலக்கியத்துறையில் மிகவும் பிரபலமான எழுத்தாளராக அறியப்பட்டவர். அவருக்கு வயது 83. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் உட்பட பிரபல எழுத்தாளர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம் பீர் முகம்மதுவின் இலக்கியச் சேவைகளுக்காக அவருக்கு சிறப்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE