கொடைக்கானல் வனப்பகுதியில் யானைகள் முகாம்; சுற்றுலா பயணிகளுக்குத் தடை!

By காமதேனு

கொடைக்கானல் பேரிஜம் ஏரி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானல் பேரிஜம் ஏரி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி வாங்கிச் செல்லும் இடங்களில் ஒன்றாக பேரிஜம் வனப்பகுதி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இந்த ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பேரிஜம் ஏரி வனப்பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி வெளிநாட்டு வகை மரங்கள் அகற்றப்பட்டு இந்திய வம்சாவளி மரங்கள், புற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

தற்போது பேரிஜம் ஏரி வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் 5 முறை இப்பகுதிகளில் யானகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இன்றும் யானைகள் கூட்டம் பேரிஜம் பகுதியில் முகாமிட்டுள்ளதால், பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை விதித்து உள்ளனர். இந்த தடையினால் பேரிஜம் ஏரிக்கு செல்ல இருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE