அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டண உயர்வு இன்றி மாற்று வழிகளில் வருவாயினை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கொண்டு செல்லும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு விரைவு பேருந்துகளில் இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை அனுப்ப முக்கிய பேருந்து நிலையங்களில் மட்டுமே புக்கிங் ஆபிஸ் வசதி உள்ளது. இந்த திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் போக்குவரத்து பணிமனைகளிலும் பார்சல் புக்கிங் அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 22 பணிமனைகளில் பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்களை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.