பாண்டிய மன்னன் கொடுத்த செப்புப் பட்டயம்... குற்றாலநாதர் கோயிலில் கண்டுபிடிப்பு!

By காமதேனு

பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்புப் பட்டயம், குற்றாலநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

பாண்டிய மன்னன் செப்புப் பட்டயம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், குற்றாலநாதர் கோயில் உள்ளது. இங்கு ஐந்து பழமையான செப்பு பட்டயங்களை, இந்து சமய அறநிலைய துறையின் சுவடித் திட்ட பணிக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். குற்றாலநாதர் கோயிலில் கிடைத்தவற்றில், இரண்டு செப்புப் பட்டயங்கள், அழகன்பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோர், குற்றாலநாதர் கோயிலுக்கு சாயரட்சை கட்டளை என்ற, மாலை வழிபாட்டுக்கு தானம் அளித்ததை குறிப்பிடுகின்றன.

இன்னொரு செப்புப் பட்டயத்தில், அசாதுவாலா சாய்பு என்ற இஸ்லாமியர், நித்திய விழா பூஜைக்கு தானம் அளித்த செய்தி பதிவாகி உள்ளது. மற்ற செப்புப் பட்டயங்களில், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், குமரகுருபரர் பாடல்கள் உள்ளன.

மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின், 14 முதல் 18ம் நூற்றாண்டு வரை, அவர்களின் வாரிசுகள் தென்காசி, வள்ளியூர், கரிவலம்வந்தநல்லுார், செங்கோட்டை, கயத்தாறு, நடுவக்குறிச்சி, புலியூர் ஆகிய இடங்களில் இருந்து ஆட்சி செய்துள்ளனர். குற்றாலநாதர் கோயிலுக்கு தானம் அளித்த அழகன்பெருமாள் பாண்டியனின் காலம், 1473 முதல் 1506 வரை என, 'அழகன்பெருமாள் கதை' என்ற ஓலைச்சுவடி குறிப்பு உள்ளது.

கோயிலில் உள்ள குறிப்புகள்

இந்த அழகன் பெருமாள் பாண்டியில் அரச பதவி போட்டியால், தன் அண்ணனின் அமைச்சரால் கொல்லப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த அழகன்பெருமாள் பாண்டியன் தான், இந்த கோயிலுக்கு தர்ம காரியங்கள் செய்ததாக செப்புப் பட்டயம் கூறுகிறது. இவனுக்கு, 'கோசடிலவன், மாறன், திரிபுவனசக்கரவர்த்தி, கோனேரிமைகொண்டான், ஸ்ரீபெருமாள்' என்ற பட்டப்பெயர்களும் இருந்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்

இன்றும் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தலைமையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

மதுரை ஏவி மேம்பாலத்துக்கு 138-வது பிறந்த நாள்... பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

HBD LR Eswari: இசையுலகின் பட்டத்துராணிக்கு பிறந்தநாள்!

முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE