சென்னை மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல ஒரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 ரூபாய்க்கு சுற்றுலா சிறப்பு பயண அட்டை எடுத்தால் ஒரு நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி 150 ரூபாய் செலுத்தி இந்த இந்த சிறப்பு அட்டையை வாங்கி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். பயண முடிவில் சிறப்பு அட்டையைத் திரும்ப கொடுத்து 50 ரூபாயைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களிலும் இந்த சலுகையைப் பயன்படுத்தலாம் எனவும், ஒரு நாள் மட்டுமே இந்த சிறப்பு பயண அட்டை செல்லுபடியாகும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.