குண்டாக இருப்பவர்கள் பஸ்சில் செல்ல சிரமம்... அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

By காமதேனு

உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

உடல் பருமன் (மாதிரி படம்)

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் போதிய இடைவெளியின்றி பயணிகள் பயணிக்க சிரமமாக இருந்து வருகிறது. இந்த நிலையினால் உடல் பருமானான பயணிகள் புறநகர் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகுந்த சிரமத்தையும், உடல் அசதியையும் ஏற்படுத்தி வந்தது.

இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது புறநகர் பேருந்துகளில் உடல் பருமனானவர்கள் இலகுவாக பயணிக்க பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கென ஒவ்வொரு பேருந்திலும் 5 இருக்கைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், விரைவில் 4 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE