வார இறுதி... முகூர்த்த நாட்கள்.. கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம்!

By காமதேனு

வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய பகுதிகளிலிருந்து கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

செப்-08 வெள்ளிக்கிழமை, 09 சனிக்கிழமை விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளான 10 ஞாயிற்றுக்கிழமை என சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார விடுமுறை முகூர்த்தநாளையொட்டி கும்பகோணம் கோட்டத்தில் 8 மற்றும் 9ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாருர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, நாகை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு இருவழிகளிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஊர் திரும்ப ஏதுவாக ஞாயிறு, திங்கள் கிழமைகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8ம் தேதி அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதோடு பல்வேறு இடங்களிலிருந்து அதாவது திருச்சி, கும்பகோணம், தஞ்சை, கோவை, மதுரை, திருப்பூர் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் 125 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு http://www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE