மிக்ஜாம் புயல்... மதுரையிலும் விமானங்கள் ரத்து!

By காமதேனு

மிக்ஜாம் புயல் காரணமாக மதுரை வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வெள்ளமென ஓடும் மழைநீர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் மட்டுமின்றி விமான ஓடுதளத்திலும் மழைநீர் புகுந்துள்ளது. அத்துடன் சென்னை விமான நிலையம் இரவு 11 மணி வரை மூடப்பட்டுள்ளது. சுமார் 150 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையம்

சென்னை பகுதியில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வரும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மதுரையிலிருந்து பகல் 10:20 மணிக்கு மற்றும் 11 40 மணியளவில் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரை வரும் ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது துபாயிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக மாலை 6:30 மணி அளவில் மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE